Site icon Tamil News

பிரான்சில் ஆறு விமானநிலையங்களிற்கு மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல்..!

பிரான்சின் ஆறு விமானநிலையங்களிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் ஆறு விமானநிலையங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் பொலிஸாரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளன.

மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன – மத்திய கிழக்குபதற்ற நிலையை தொடர்ந்து பிரான்சில் தொடர்ச்சியாக இவ்வாறான அச்சுறுத்தல்கள் வெளியாகியுள்ளன.

அச்சுறுத்தல்கள் உண்மையானவையாஎன்பதை உறுதிசெய்வதற்கான சோதனை தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக என அறிவதற்காக அதிகாரிகள் மக்களை விமானநிலையங்களில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.

Exit mobile version