மின்கட்டண அதிகரிப்பு காரணமாக பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானத்திற்கு வந்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இதனை தெரிவித்தார்.
இன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் மின் கட்டணத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.