Site icon Tamil News

கொழும்பில் எட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயம்

கொழும்பு மாநகர சபைக்குள்பட்ட 8 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகவும், குறித்த குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி குடியிருப்புகளை இடிக்க முன்வந்துள்ளதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வேகந்த அடுக்குமாடித் திட்டம், பம்பலப்பிட்டி அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம், வேல்ஸ் குமார மாவத்தை குடியிருப்புத் திட்டம், சிறிதம்ம மாவத்தை குடியிருப்புத் திட்டம், கம்கருபுற குடியிருப்புத் திட்டம், B36 மாளிகாவத்தை குடியிருப்புத் திட்டம், ஜி. எச். ஜே. கே. எம்.என் குடியிருப்புத் திட்டம் மற்றும் மிஹிந்து மாவத்தை குடியிருப்புத் திட்டம் ஆகிய எட்டு வீட்டுத் தொகுதிகள் இவ்வாறான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த குடியிருப்புத் திட்டங்களின் ஆளுகை அதிகாரியான கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபை அந்த குடியிருப்புத் தொகுதிகளை இடித்துத் தள்ளுமாறு வீடமைப்பு அமைச்சிடம் முன்மொழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

Exit mobile version