Site icon Tamil News

இலங்கை : பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் முட்டை விலை?

கிறிஸ்மஸ் காலத்தை இலக்காகக் கொண்டு பேக்கரி மற்றும் பிஸ்கட் உற்பத்திக்காக முட்டைகளை சேகரித்து இருப்பு வைப்பதே உள்ளூர் சந்தையில் முட்டை விலை உயர்வுக்கு காரணம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (AIEPA) தெரிவித்துள்ளது.

தற்போதைய மழையுடனான காலநிலை காரணமாக ஒவ்வொரு கோழிப்பண்ணையிலிருந்தும் குறைந்தது 20 வீதமான கோழிகள் உயிரிழந்துள்ளதாகவும் அதனால் முட்டை உற்பத்தி குறைந்துள்ளதாகவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார்.

“பல பெரிய மற்றும் சிறிய அளவிலான பேக்கரிகள் மற்றும் பிஸ்கட் நிறுவனங்கள் தங்கள் முட்டை இருப்புகளை கடுமையாக்கியுள்ளன, விடுமுறை காலங்களில் தங்கள் உற்பத்தியை அதிகரிக்க இலக்கு வைத்துள்ளன. முட்டை இருப்பு சேகரிப்பு நவம்பர் 15 முதல் தொடங்கியது,” என்றார்.

அதனால், உள்ளூர் சந்தையில் பெரும் தட்டுப்பாடு உருவாகி, முட்டை ஒன்றின் விலை ரூ.62க்கு தற்போது விற்பனை செய்யப்படுகின்றது.

“தற்போதைய முட்டை உற்பத்தியாளர்களால் இந்த முட்டை தட்டுப்பாடு ஏற்படவில்லை, ஆனால் பண்டிகை காலங்களில் இந்த நிலை உருவாகும். ஆனால், பண்டிகை காலம் முடிந்தவுடன் முட்டை விலை அதிகபட்சமாக தலா ரூ.40 வரை குறையும்” என சங்க பொருளாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version