Site icon Tamil News

இலங்கையில் அதிகாலையில் துப்பாக்கிச்சூடு – ஸ்தலத்திலேயே உயிரிழந்த நபர்

ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கமுனுபுர புள்ளைர் சந்தியில் இன்று அதிகாலை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் ஸ்ரீபுரா பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கவுந்திஸ்ஸபுர, ஸ்ரீபுர பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

இதேவேளை, தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஸ்ரீபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version