நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் லபுக்கலை – டொப்பாஸ் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதில் பலர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பேருந்தில் 42 பேர் பயணித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.