Tamil News

தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக பொதுமக்கள் சிரமம்

தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள விடுத்த அழைப்பின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தபாலகங்கள் மூடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு பிரதான தபாலகம் இன்றைய தினம் மூடப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றது.
இதன்காரணமாக பல்வேறு தேவைகள் நிமிர்த்தம் தபாலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதை காணமுடிந்தது.

இன்றும் நாளையும் தபாலகங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தபால் சேவையினை பெறவுள்ள மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

Exit mobile version