Site icon Tamil News

உக்ரைனின் கிழக்கு பகுதியில் ட்ரோன் தாக்குதல் – 16 பேர் உயிரிழப்பு!

கிழக்கு உக்ரைனில் உள்ள கோஸ்டியன்டினிவ்கா நகரில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்ய படையினர் நடத்திய இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.

போர்க்களத்திற்கு அருகாமையில் உள்ள தொழில் நகரத்தில் இந்த  தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனிய அதிகாரிகள் டெலிகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். ரஷ்யாவினுடைய  தீமை கூடிய விரைவில் தோற்கடிக்கப்பட வேண்டும் என Zelenskiy கூறினார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சர் Ihor Klimenko கொல்லப்பட்ட 16 பேர் தவிர, குறைந்தது 28 பேர் தாக்குதலில் காயமடைந்ததாகவும், அது மத்திய நகர சந்தையில் நடந்ததாகவும் கூறினார்.

Exit mobile version