பாடசாலை மாணவர்களுக்கான மின்னஞ்சல் கணக்குகளை அமைக்கும் போது பெற்றோரின் தரவுகளை உள்ளிட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரின் தரவுகளை வழங்குவதன் மூலம் பிள்ளைகள் எந்தவொரு இணையத்தளத்தையும் அணுகும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுசீரமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவில் பொலிஸ் குற்றப்பிரிவின் உயர் அதிகாரிகளால் இது தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டது.
இதன்படி, பிள்ளைகளின் சரியான வயதை சேர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சரியான வயதை உள்ளிடுவதால், இணையதள அமைப்பே குழந்தைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து இணையதளங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்துகிறது என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.