Site icon Tamil News

பிளவுபட்ட சுதந்திரக் கட்சியினர் ஒரே மோடையில்

அரசியல் ரீதியாக பிளவுபட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 02 குழுக்களும் இன்று ஒரே மேடையில் சந்தித்துக்கொண்டனர்.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 108வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போதே இந்த நிகழ்வு பதிவாகியுள்ளது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவு பெற்ற குழுவும், அமைச்சர் நிமல் சிறிபாலத சில்வாவை கொண்ட குழுவும்  இதன்போது  இணைந்துள்ளமை விசேட அம்சமாகும்.

எவ்வாறாயினும் அவர்கள் இருபுறமும் அமர்ந்திருந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவது நீதிமன்ற உத்தரவின் பேரில் தணிக்கை செய்யப்பட்டு, அமைச்சர் நிமல் சிறிபாலட சில்வா பதில் தலைவராக நியமிக்கப்பட்டார்.

Exit mobile version