Site icon Tamil News

இலங்கையில் நீரிழிவு நோயினால் அதிகளவானோர் பாதிப்பு

நீரிழிவு நோயினால் நாட்டில் 23 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை உட்சுரப்பியல் நிபுணர்கள் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

நீரிழிவு நோய் காரணமாக இலங்கையில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை பேராசிரியர் வைத்தியர் பிரசாத் கட்டுலந்த, தெரிவித்துள்ளார்,

மேலும் நீரிழிவு நோயினால் ஆபத்தில் உள்ள உலகின் முதல் 10 நாடுகளுக்குள் இலங்கை உள்ளதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Exit mobile version