Site icon Tamil News

இஸ்ரேலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2500ஐக் கடந்தது!

போராளிக் குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது முன்னோடியில்லாத தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இதற்கு பதலடி கொடுக்கும் விதமாக போர் பிரகடனம் செய்து இஸ்ரேலும் பதில் தாக்குதல் தொடுத்து வருகிறது.

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆன்டனி பிளிங்கன் பிரதம மந்திரி பெஞ்சமின் நேதன்யாகுவை சந்திக்க இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், உணவு, எரிபொருள் மற்றும் மருந்துக்காக ஆசைப்படும் பாலஸ்தீனியர்களுடன் காஸாவில் துன்பம் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளதுடன். எரிபொருள் பற்றாக்குறை, மின் தடை என பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் இந்த மோதல் நடவடிக்கையின்போது 150 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை விடுவிக்கும் வரை முற்றுகை தொடரும் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இந்நிலையில் காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் வியாழன் பிற்பகல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், உள்ளே தஞ்சமடைந்த குடும்பங்கள் மீது குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டதாக காசா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மோதல் போக்கின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2500ஐக் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version