Site icon Tamil News

கென்யாவில் கட்டுப்பாட்டை இழந்த லொரி ; 50 பேர் பலி

கென்யாவில் டிரக்வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கெரிச்சோ நகுறு என்ற இரண்டு நகரங்களிற்கு இடையில் உள்ள அதிவேகநெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் சிலர் வாகனங்களிற்கு அடியில் சிக்குண்டிருக்கலாம் என உள்ளுர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

30 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெரிச்சோவை நோக்கி சென்றுகொண்டிருந்த டிரக் கட்டுப்பாட்டை இழந்தது பெருமளவு பயணிகளுடன் நின்றுகொண்டிருந்த சிறிய பயணிகள் பேருந்தை மோதியிருக்கவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதோடு பேருந்து தரிப்பிடத்தில் நின்றவர்களையும் டிரக் மோதியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து இடம்பெற்றதையும் 20 உடல்களையும் நான் பார்த்தேன் என வாகனச்சாரதியொருவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் கடும் மழைகாரணமாக மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version