Site icon Tamil News

அமெரிக்க வரலாற்றில் மிகக் கொடிய பேரழிவு – அதிகரிக்கும் மரணங்கள்

அமெரிக்க வரலாற்றில் மிகக் கொடியதாகக் கருதப்படும் ஹவாயின் மௌய் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் பாரிய அச்சுறுத்தல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், பேரழிவுப் பகுதியில் மீட்பு பணி தொடர்ந்து தேடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வியாழன் அன்று 111 ஆக இருந்த கொடிய காட்டுத்தீயில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது, 114 ஆக அதிகரித்துள்ளது என்று மௌய் காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அதிபர் ஜோ பைடன் ஆகஸ்ட் 21 அன்று காட்டு தீ குறித்த நிமையை ஆராய ஹவாயின் மௌய்க்கு செல்வார் என்று வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Exit mobile version