Site icon Tamil News

காசாவில் புதிதாத பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

காசாவில் புதிதாகப் பிறந்த குழந்தை உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் நன்றாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு காசாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு வார்டில், குறைமாத குழந்தைகள் உயிருக்கு போராடுகிறார்கள்.

தாய்மார்கள் தாங்களே மிகவும் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக இருப்பதால், அவர்கள் தாய்ப்பால் கொடுக்க முடியாது, அதனால் குழந்தைகள் இறக்கிறார்கள், உண்மையில் பட்டினியால் இறக்கிறார்கள் என வேதனை தெரிவித்துள்ளனர்.

இரண்டு வாரங்களுக்குள், 250 க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள நோயாளிகளை நாங்கள் கண்டறிந்தோம்,” என்று மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஹாசம் அபு சஃபா விளக்குகிறார்.

 

Exit mobile version