பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரட்னவின் பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபரின் பதவி வெற்றிடம் நிரப்பப்படாமல் இருந்த நிலையில், ஜனாதிபதி 48 மணி நேரத்துக்குள் புதிய பொலிஸ் மா அதிபரை நியமனம் செய்வார் என பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (ஜுலை 07) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இதற்கமைவாக தற்போது பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம் மேலதிகமாக மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.