Site icon Tamil News

இலங்கையில் இருந்து இனி குற்றவாளிகள் தப்பிச் செல்ல முடியாது

நாட்டை விட்டு தப்பிச் செல்லும் அல்லது நாட்டிற்கு வரும் குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தானியங்கி முகத்தை அடையாளம் காணும் முறைமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பதில் பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோன், கடந்த காலங்களில் சுமார் 42 குற்றவாளிகள் நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனை தடுப்பதற்கு பொறிமுறை தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version