Site icon Tamil News

மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் 06 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

போராட்டத்தின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க உள்ளிட்ட 06 பேர் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதியில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் மின்சார நுகர்வோர் சங்கத்தினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போதே மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் தேரரொருவர் உட்பட 6 பேரைப் பொலிஸார் கைது செய்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version