Site icon Tamil News

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா தொற்று – இருவர் உயிரிழப்பு!

இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துவரும் நிலையில்,  இருவர் உயிரிழந்துள்ளதாக  கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண்ணும்,  யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசிக்கும் 73 வயதுடைய ஆணும் இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த பெண் கடந்த 27ஆம் திகதி ஐனுர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் 28 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

மற்றைய நபர் 28ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று 29 ஆம் திகதி  உயிரிழந்துள்ளார்.

கொவிட் 19 தொற்று மீண்டும் சமூகம் முழுவதும் பரவும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பாக முகக்கவசம் அணிந்து சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version