அளுத்கமை நகரில் பெண்கள் அழகு நிலையமொன்றை நடத்தும் பெண்ணொருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது நிலையத்துக்கு பல மாதங்களாக மின்சாரத்தை திருடிய குற்றச்சாட்டில் அளுத்கமை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில் களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் அளுத்கமை தலைமை அலுவலகம் மற்றும் அளுத்கமை பொலிஸின் புலனாய்வுப் பிரிவினரே இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.