Site icon Tamil News

வறுமைப் பொறியில் இருந்து விடுபட இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவு!! சீனா

இலங்கையை வறுமைப் பொறியில் இருந்து விடுவித்து அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென்ஹாங் தெரிவித்துள்ளார்.

74வது சீன தேசிய தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இலங்கைக்கான சீன தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.

இலங்கைக்கான சீனத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த 74வது சீன தேசிய தின விழா நேற்று (28) கொழும்பில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version