Site icon Tamil News

நுகர்வோர் குறைவான விலையில் முட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்!

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள சதொச கடைகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளை வாடிக்கையாளர்கள் இன்று (26.07) முதல் கொள்வனவு செய்ய முடியும்.

அதன் வெற்றியின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் நாடளாவிய ரீதியில் சதொச கடைகளின் ஊடாக விற்பனை செய்யப்படும் என சதொசவின் தலைவர் திரு.பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, முட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள வரி நீக்கப்பட்டால், 40 ரூபாவிற்கும் குறைவான விலையில் முட்டைகளை விற்பனை செய்யத் தயார் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Exit mobile version