Tamil News

திறைசேரி உண்டியல்கள் ஏலம்விடும் திகதியில் மாற்றம்! இலங்கை மத்திய வங்கி

ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 10ஆம் திகதி ஏலத்தின் மூலம் வழங்கப்படவுள்ளது.

இந்த ஏலத்திற்கான திறைசேரி உண்டியலின் தீர்ப்பனவு திகதி ஜூலை மாதம் 4 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

முன்னதாக இந்த ஏலத்திற்கான தீர்ப்பனவு திகதியாக எதிர்வரும் 30ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த திகதி மாற்றப்பட்டுள்ளது.

பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு எதிர்வரும் 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறையை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி நடத்தப்படவிருந்த திறைசேரி உண்டியல் தீர்ப்பனவு திகதி ஜூலை 4ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Exit mobile version