Site icon Tamil News

இலங்கையில் பெண் பொலிஸார் குளிப்பதை வீடியோ எடுத்த கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கதி

பெண் பொலிஸார் தங்குமிட விடுதி குளியறையில் குளித்து கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மறைந்திருந்து படம் பிடித்த ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

லிந்துலை பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸார் தங்குமிட விடுதி குளியலறையில் குளித்து கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இதே பொலிஸ் நிலையத்தில் கான்ஸடபிள் பதவி வகிக்கும் ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் தனது ஸ்மார்ட் போனால் படம் பிடித்து வைத்திருந்துள்ளார்.

இந்த விடயம் ஏனைய பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்து பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்த லிந்துலை பொலிஸார் அவரை நேற்றைய தினம் வியாழக்கிழமை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

அதனை அடுத்து சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள்ளை எதிர்வரும் 09ஆம் திகதி செவ்வாய்க் கிழமை வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

Exit mobile version