Site icon Tamil News

கொசோவோவில் நேட்டோ வீரர்களுக்கும், செர்பிய இனத்தவருக்கும் இடையில் மோதல்!

கொசோவோவில் நேட்டோ தலைமையிலான அமைதி காக்கும் படைக்கும், செர்பியர் இனத்தவருக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 30 தஇற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

வடக்கு கொசோவோவில் உள்ள நகராட்சிகளில் ஒன்றின் அலுவலகங்களைக் கைப்பற்ற செர்பியர்கள் முயன்றுவருகின்றனர்.  அங்கு அல்பேனிய இன மேயர்கள் கடந்த வாரம் தங்கள் பதவிகளை ஏற்றனர். இதனையடுத்து மோதல் வெடித்தது.

இந்த மோதலில், 11 இத்தாலிய வீரர்கள், 19 ஹங்கேரிய வீரர்கள் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் பிரிஸ்டினாவிற்கு வடக்கே 45 கிலோமீட்டர் (28 மைல்) தொலைவில் உள்ள Zvecan நகராட்சியில் செர்பியர்கள் நேட்டோ துருப்புக்களுடன் மோதியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கூட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் செய்துள்ளனர்.

Exit mobile version