Site icon Tamil News

குருந்தூர் மலையில் பக்தர்களுக்கு இடையூறு விளைவித்ததாக முறைப்பாடு!

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் நிகழ்வில் பக்தர்களுக்கு இடையூறு விளைவித்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொண்டு பொங்கல் பண்டிகையை ஏற்பாடு செய்ததாகவும், இந்து மக்களின் உரிமைகளுக்கு எதிராக சிங்கள பௌத்த சக்திகள் செயற்பட்டதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 18ம் திகதி குருந்தி கோவில் அருகே பொங்கல் நிகழ்வு நடபெற்ற போது, சிங்களவர்கள் ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடத்த சென்றதால், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version