Tamil News

யாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் அவர் கல்வி கற்ற யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் இன்று மதியம் 12:30 மணயிளவில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கபட்டது

இதன்பொழுது ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தி தொடர்ச்சியாக தியாகதீபத்தின் தியாக வரலாற்று பேருரை முன்னெடுக்கப்பட்டு தொடர்ச்சியாக மலரஞ்சலி செலுத்தி ஈகைசுடர் மாணவர்களால் ஏற்றப்பட்டது.

இதன்பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் , பல்கலைக்கழக மாணவர்கள் ,கல்வி சாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.-

   

அத்துடன் தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் இன்று விசுவமடு தேராவில் புதிய நிலா விளையாட்டு மைதானத்தில் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியது.

தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணிக்கு மாவீரரின் பெற்றோரினால் பொதுச் சுடரேற்றலுடன் ஆரம்பமானது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு மாவட்ட சமூக செயற்பாட்டாளர்களும் பொது மக்களும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Exit mobile version