Site icon Tamil News

தீவிர பாதுகாப்பில் கொழும்பு – கடமைகளில் 100 புலனாய்வு பிரிவு அதிகாரிகள்

கொழும்பில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் 100 பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தமது கடமைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு கொழும்பில் பாதுகாப்பு கடமைகளுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக தமிழ் – சிங்கள புதுவருட காலத்தில் வாகன திருட்டு, தங்க நகை கொள்ளை போன்ற குற்றங்களை தடுப்பதற்கும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் மேல்மாகாண புலனாய்வு பிரிவின் அதிகாரிகளை கொழும்பில் பொது கடமைகளில் ஈடுபடுத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

Exit mobile version