இரத்மலானையிலிருந்து ஒரு மணித்தியாலம் பத்து நிமிடங்களில் யாழ்ப்பாணத்தை அடைய முடியும் என இரத்மலானை விமான நிலைய முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்தார்.
சனி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் காலை விமான சேவையுடன், வாரத்தில் நான்கு நாட்கள் போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று, பன்னிரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ஒரு சிறிய விமானம், செஸ்னா 208, பயணத்தில் இணைந்துகொண்டது.
ஃபிட்ஸ் ஏவியேஷன் / டேவிட் பீரிஸ் ஏவியேஷன் ஆகிய நிறுவனங்கள் இந்த பயணிகள் போக்குவரத்திற்காக விமானங்களைப் பயன்படுத்தியுள்ளன.
மேலும் இந்த விமானத்தில் பயணிக்கும் பயணிகள் ஏழு கிலோகிராம் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் எனவும் யாழ்ப்பாணம் செல்வதற்கும் அங்கிருந்து செல்வதற்கும் வசதியாக இருக்கும் எனவும் முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்தார்.