Site icon Tamil News

தென்கொரியாவை அச்சுறுத்தும் மூட்டைப்பூச்சி – 30-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

தென்கொரிய தலைநகர் சியோலில், மூட்டைப்பூச்சி தொல்லை அதிகரித்து பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இதனால், குடியிருப்பு பகுதிகள் மற்றும் சுரங்க ரயில் நிலையங்களில் மாநகராட்சி ஊழியர்கள் மூட்டை பூச்சி மருந்து தெளித்துவருகின்றனர்.

கல்லூரி விடுதிகள், மசாஜ் ஸ்பாக்கள் போன்ற இடங்களில் மூட்டைப்பூச்சி பெருக்கம் அதிகரித்தது.

அது சார்ந்த தொற்றுகளால் முப்பதுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

அடுத்த 4 வாரங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மூட்டைப்பூச்சிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version