Site icon Tamil News

மே 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் அனைத்து மது, இறைச்சி கடைகளுக்கு பூட்டு?

ஸ்ரீ புத்தர் ஆண்டு 2568 (2024) க்கான அரச வெசாக் திருவிழாவிற்காக நடத்தப்படும் தொடர் நிகழ்ச்சிகள் காரணமாக, மே 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மிருகவதையை நிறுத்துமாறும், இறைச்சிக் கடைகள் மற்றும் மதுபானக் கடைகள் உட்பட போதைப்பொருள் விற்பனை செய்யும் இடங்களை மூடுமாறும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, மாத்தளை மாவட்டத்தை மையமாகக் கொண்டு வெசாக் வாரமாக பெயரிடப்பட்டு, அரச வெசாக் விழா எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான அரச வெசாக் பண்டிகையின் தொனிப்பொருள் “மற்றவர்கள் செய்ததை பார்க்காமல் நாம் செய்ததை நோக்குவோம்” என்பதாகும்.

விழாவின் தொடக்க விழா மாத்தளை தர்மராஜா பிரிவேனா வளாகத்திலும், நிறைவு விழா பல்லேபொல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மில்லவன ஸ்ரீ சுனந்தராம ஆலய வளாகத்திலும் நடைபெற உள்ளது.

Exit mobile version