Site icon Tamil News

இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்: தற்காலிகமாக மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் இன்று (12) மாலை 6 மணி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த கூடுதல் விவரங்களை பல்கலைக்கழக நிர்வாகம் இன்னும் வெளியிடவில்லை மற்றும் வளாகம் எப்போது திறக்கப்படும் என்பது தொடர்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை

Exit mobile version