Site icon Tamil News

அரசு ஊழியர்களின் வேலை நேரம் தொடர்பான விசேட சுற்றறிக்கை

அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் கட்டாயம் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அலுவலகங்களில் தங்கி பணிகளை செய்ய வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அது பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சில அரச நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உரிய கால அவகாசம் இன்றி வந்து செல்வதை அவதானித்ததை அடுத்து இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Exit mobile version