Site icon Tamil News

சீனாவின் கப்பல் இலங்கை வருவதற்கு அனுமதி!

“ஷி யான் 6” என்ற சீனக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பல் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இந்த தகவலை வெளியிட்ட அவர். குறித்த கப்பல் ஒக்டோபர் மாத்தில் இலங்கைக்கு வர அனுமதி கோரியதாகவும், ஆனால் நவம்பரில் வருவதற்குதான் அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையுடன், சீனா நெருக்கமாக பணியாற்றி வரும் நாடு என்பதால் சில முக்கியமான உறவுகளை அந்நாட்டுடன் பேணி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version