Site icon Tamil News

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான சீன பிரஜை நாடு கடத்தல்!

சர்வதேச காவல்துறையினரால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

சீனாவில் பாரியளவில் பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் 28 வயதுடைய சீன பிரஜையே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

மாலைத்தீவில் இருந்து நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த சீன பிரஜை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

BIA இன் CID அதிகாரிகளின் மேலதிக விசாரணையைத் தொடர்ந்து, அவர் நேற்று (04) இரவு எமிரேட்ஸ் விமானத்தில் மாலைதீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

Exit mobile version