Site icon Tamil News

19 ஆண்டுகளுக்குப் பின் ஏற்றப்பட்ட சீன கொடி

19 ஆண்டுகளுக்குப் பிறகு, பசிபிக் தீவு நாடொன்றில் சீனக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

நவுருவில் உள்ள தற்காலிக சீன தூதரகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவுக்கும் நவுருவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நவுரு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா நண்பனாகக் கருதும் தைவானுடன் தற்போதுள்ள அனைத்து உறவுகளையும் கைவிடுவதாக தெரிவித்துள்ளது.

நவுரு மாநிலமும் ஒரே சீனா என்ற கொள்கையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.

Exit mobile version