Site icon Tamil News

பற்றி எரியும் காசா – போரால் பிளவுப்பட்டுள்ள மெக்டொனால்டு

இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக மெக்டொனால்டு வலையமைப்பு பிளவுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலில் உள்ள மெக்டொனால்டு கிளை பிரதிநிதிகள் இஸ்ரேல் இராணுவத்திற்கு இலவச உணவு வழங்க முடிவு செய்ததை அடுத்து இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடுகளில் உள்ள மெக்டொனால்டு கிளைகள் இந்த முடிவை நிராகரித்தபோது பிரச்சினை எழுந்தது.

அதன்படி, காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவளிக்க சவுதி அரேபியா, ஓமன், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், எகிப்து, பஹ்ரைன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் முடிவு செய்துள்ளனர்.

மூன்று மில்லியனுக்கும் அதிகமான தொகையை உறுதிமொழியாக வழங்குவது சிறப்பு.

Exit mobile version