Site icon Tamil News

தைவானுக்கு 24 போர் விமானங்களை அனுப்பிய சீனா!

சீனா – தைவானுக்கு இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், எல்லைப் பகுதியில், 24 போர் விமானங்களை சீனா அனுப்பியுள்ளதாக  தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தைவான் ஜலசந்தியின் இடைக் கோட்டையை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை எட்டு சீன விமானங்கள்  கடந்ததாகவும், பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் நான்கு சீன போர்க்கப்பல்களும் ‘கூட்டு போர் தயார்நிலை ரோந்துப்பணியில்’ ஈடுபட்டதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

சீனா தனது பகுதியில் இராணுவ அழுத்தத்தை அதிகரித்து வருவதாகவும் தைவான் குற்றம் சாட்டியுள்ளது.

தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி எனக் கூறி அந்நாட்டினை தன்னுடன் இணைத்துக்கொள்ள சீனா திட்டமிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version