Site icon Tamil News

மைச்சாங் சூறாவளி : சென்னை விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

மைச்சாங் சூறாவளி அடுத்த 24 மணி நேரத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இரவு 11 மணி வரை தனது செயல்பாடுகளை மூடுவதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.

“கடுமையான வானிலை காரணமாக இன்று 23. 00 மணி வரை விமானநிலையம் வருகை மற்றும் புறப்பாடு நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டுள்ளது” என்று சமூக ஊடக தளமான X இல் சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.

நள்ளிரவு முதல் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக சென்னையில் இருந்து பெங்களூரு விமான நிலையத்தில் 33 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version