Site icon Tamil News

முதல் முறையாக சரிந்த ChatGPT – திடீரென பயன்பாட்டை குறைத்த மக்கள்

ChatGPT தொடங்கிய நாள் முதல் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில், முதன்முறையாக அந்த தளத்திற்கான பயனாளர்கள் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், OpenAi நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு சேட்பாட், குறுகிய காலத்திலேயே 100 மில்லியன் பயனர்களை எட்டி சாதனையை படைத்தது.

ஆனால் கடந்த ஜூன் மாதத்தில் முதன்முறையாக அந்த இணையதளத்திற்கான போக்குவரத்து குறைந்துள்ளதாக Similar web என்ற பகுப்பாய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜூன் மாத நிலவரப்படி, மொபைல் மற்றும் டெஸ்க்டாப்பில் ChatGPT பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 9.7% சதவீதம் குறைந்துள்ளது.

அதேபோல, 5.7% தனிப்பட்ட பார்வையாளர்களும் குறைந்துள்ளனர். மேலும் ChatGPT பயன்படுத்துவதற்கு பயனர்கள் செலவு செய்த பணத்தின் அளவும் 8.5% குறைந்துள்ளது. டிராபிக் குறைவதென்பது அதன் புதுமை குறைந்து வருகிறது என்பதற்கான அறிகுறியாகும்.

தொடக்க காலத்தில் பயனர்கள் ChatGPT-ஐ மும்முரமாகப் பயன்படுத்தினர். கம்ப்யூட்டர் ப்ரோக்ராம், கதை, கட்டுரைகள், வீட்டுப் பாடங்கள், சந்தேகங்கள் என பல விடயங்களுக்கு இந்த தளம் பயன்படுத்தப்பட்டது. இது தொடங்கிய இரண்டே மாதத்தில் 100 மில்லியன் பயனர்கள் இதில் பதிவு செய்தனர்.

தற்போதைய இந்த மந்தநிலை ChatGPT இயக்குவதற்கான எங்களுடைய செயலவை ஓரளவு கட்டுப்படுத்த உதவும் என OpenAi நிறுவனர் சாம் அல்ட்மேட் தெரிவித்துள்ளார்.

“ஏனென்றால் அதிகப்படியான நபர்கள் பயன்படுத்தும் போது கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க அதிதீவிர கணினி சக்தி தேவைப்படுகிறது அதற்கு அதிக செலவாகும். அந்த செலவைக் கேட்டால் என் கண்ணில் நீர் வடிகிறது” என ChatGPT இயக்குவதற்கு ஆகும் செலவைப் பற்றி அவர் விவரித்தார்.

Exit mobile version