Site icon Tamil News

பலாத்காரமாக கைப்பற்றிய வீட்டை பெண்ணுக்கு கையளிக்க பணிப்பு – ஞானசார தேரர் மீது குற்றச்சாட்டு

பம்பலபிட்டிய felon residencies வீடமைப்பு தொகுதியில் பெண் ஒருவரின் வீட்டை பலாத்காரமாக கைற்றியுள்ள ஞானசார தேரருக்கும் மேலும் இரண்டு பிக்குகளுக்கும் அவ்வீட்டில் இருந்து வெளியேறுமாறு கொழும்பு மேலதிக நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது

வெளிநாடு ஒன்றில் வசிக்கும் இப்பெண்மணியின் சின்னம்மாவால் இப்பெண்ணுக்கு வழங்கப்பட்ட இவ்வீட்டை ஞானசார தேரர் போலி ஆவணங்கள் தயாரித்து போலி அட்டர்னி ஆவணத்தையும் தயாரித்து தனதாக்கி கொண்டுள்ளதா கடந்த ஜனவரி மாதம் தொடரப்பட்ட இவ்வழக்கை தொடர்ந்து தனது சட்டத்தரணிகள் மூலம் இப்பெண்மணி வாதிட்டு வந்துள்ளார்.

பெண்மணி சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் பொலீசாரின் விசாரணை அறிக்கைகள் ஆகியவற்றை ஆராயும் போது இந்த வீடு பெண்மணிக்குரியது என்பது தெளிவாக உறுதிப்படுத்தப் படுவதால் பெண்மணிக்கு உரிய வீட்டு உரிமைக்கு தடையாக இருக்க வேண்டாம் எனவும் நீதிமன்றம் ஞானசார தேரருக்கு உத்தரவிட்டது.

Exit mobile version