Site icon Tamil News

பொது பரீட்சைகளில் மாற்றம்!

கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை 10 ஆம் தரத்தில் நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர் ‘ஆரம்ப காலத்தில் மாணவர்கள் 10 ஆம் தரத்தில் பொதுப் பரீட்சையை எதிர்கொண்டதாகவும் பின்னர் அது 11 ஆம் தரத்திற்கு ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி 10ம் தரப் பொதுப் பரீட்சையை நடத்துவது தொடர்பில் உரிய தரப்பினருடன் தற்போது கலந்துரையாடி வருவதாக கூறிய அவர் எதிர்காலத்தில் கல்வி மாற்றத்திலும் இந்த விடயம் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மிகக் குறுகிய காலத்தில் மிக வேகமாக அறிவு இரட்டிப்பாகும் சமூகத்தில்  தேவையான புதுப்பிப்புகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Exit mobile version