Site icon Tamil News

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலகல்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் Ceylon Petroleum Storage Terminals Ltd. (CPSTL) ஆகியவற்றின் தலைவர் பதவியில் இருந்து சாலிய விக்ரமசூரிய இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளரிடம் அளித்துள்ளார்.

விக்ரமசூரிய தனது ராஜினாமா கடிதத்தில், புதிய அமைச்சருக்கு தாம் விருப்பமான வாரியத்தை நியமிக்கும் சுதந்திரத்தை வழங்குவதற்காக பதவிகளில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

அவர் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் லிமிடெட் (CPSTL) ஆகியவற்றின் தலைவராக அக்டோபர் 5, 2023 முதல் நியமிக்கப்பட்டார்.

எரிசக்தி துறை நிபுணரான விக்கிரமசூரிய முன்னர் பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராகவும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

Exit mobile version