தெற்கு உக்ரைனின் கெர்சன் பகுதியில் ரஷ்யா நடத்திய செல் தாக்குதலில் நான்கு உக்ரேனியர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சரமாரி தாக்குதலால் 15 வயது சிறுவன் உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர். வீடுகள் மற்றும் ஒரு தனியார் மருத்துவமனை ஒன்று தீயில் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எதிரிகளுக்கு விடுமுறை இல்லை” என்று உக்ரேனிய ஜனாதிபதியின் அலுவலகத்தின் தலைவரான Andrii Yermak, Kherson தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.