Site icon Tamil News

சிங்கப்பூரில் பூனைகளைத் துன்புறுத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு

சிங்கப்பூரில் பாடசாலைகளில் விலங்குநலப் பாடங்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு, கற்பிக்கப்படுவதாகக் கல்வி அமைச்சுக்கான துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் தெரிவித்துள்ளார்.

விலங்கு நலனைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பாடசாலைகளுடன் பெற்றோர், சமூகப் பங்காளிகள் ஆகியோரும் ஏற்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பூனைகளைத் துன்புறுத்தும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக விலங்கு வதைத் தடுப்புச் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு மட்டுமே இதுவரை 11 சம்பவங்கள் பதிவாகின. கடந்த ஆண்டு முழுமைக்கும் 16 சம்பவங்கள் ஏற்பட்டன.

பாடசாலைகளின் குடியியல் கல்வி, சமூகக் கல்வி, அறிவியல் ஆகிய பாடங்களில் விலங்குநலம் தற்போது கற்பிக்கப்படுகின்றன.

பொறுப்பான செல்லப்பிராணி உரிமையாளராக இருப்பது முதல், சமூக, சுற்றுச்சுழல் விவகாரங்களில் எவ்வாறு மாற்றத்தைக் கொண்டுவரலாம் என்பது வரை பள்ளிகளில் கற்பிக்கப்படுவதாக கான் குறிப்பிட்டார்.

 

Exit mobile version