Tamil News

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீதான வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நடிகர் தனுஷ் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் திரையில் புகைபிடிக்கும் காட்சியில் புகைபிடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்ற சட்டப்பூர்வ எச்சரிக்கையை வெளியிடவில்லை என்று தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் துறை இயக்குனர் வி.கே. பழனி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என அரசு மற்றும் புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழ்நாடு மக்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும் வழக்கின் அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

Exit mobile version