Site icon Tamil News

நான் வீட்டிற்கு வந்து அழுதுக் கொண்டே இருந்தேன் – முதல் முறையாக ஓபனாக பேசிய கீர்த்தி சனோன்!

நடிகை கீர்த்தி சனோன் தனது முதல் போட்டோ ஷுட் குறித்த தகவலை பகிர்ந்துக்கொண்டுள்ளார். பணமதிப்புமிக்க நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் நடிகை கீர்த்தி  சனோன் தற்போது நம்பமுடியாத அளவிற்கு பெருமளவிலான படங்களைக் கொண்டுள்ளார். தற்போது பிரபாஷுடன் இணைந்து நடிக்கும், ஆதிபுருஷ் திரைப்படத்தின்  புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். Kriti Sanon இந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,  தனது மாடலிங் நாட்களில் தனது முதல் போட்டோஷூட் அனுபவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருந்தது எனக் கூறியுள்ளார். அதேநேரம் முதல் போட்டோஷுட் முடிந்ததும், வீட்டிற்கு வந்தவுடன் அழுதுகொண்டே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதை நம்புவதாகவும், காலப்போக்கில்  நம்பிக்கையை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version