Site icon Tamil News

கார் டயர் வெடித்து 5 பேர் படுகாயம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் புறவழி சாலையில் சென்னையில் இருந்து யாமேஷ் என்பவர் தனது சொந்த ஊரான வந்தவாசிக்கு மனைவி இரு குழந்தைகள் என குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மதுராந்தகம் அருகே கார் வந்து கொண்டிருந்தது
திடீரென காரின் முன் டயர் வெடித்ததில் நிலை தடுமாறி கார் முன்னாள் சென்று கொண்டிருந்த ஆட்டோ மற்றும் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த இரு இருசக்கர வாகனங்கள் மீது அதி வேகமாக மோதியது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த நபர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த நபர்கள் என ஐந்து பேர் காயங்களுடன் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எதிர்பாராத இந்த விபத்தால் உயிர் சேதம் ஏதும் இல்லை அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version