Tamil News

திருகோணமலை கன்னியா பகுதியில் வாகன விபத்து- மூவருக்கு காயம்!

திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி கன்னியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

மன்னாரிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரச பஸ் கல் குவாரிக்கு அருகில் சுற்றுலா வந்த பஸ் ஒன்று திருப்ப முயற்சித்த போது விபத்துக்குள்ளானதாகவும் இதனால் மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இவ்விபத்து இன்று (01) 11. 30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.இவ்விபத்தில் கம்பஹா பிரதேசத்தில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் மூவர் காயமடைந்துள்ளனர்.

கன்னியாவிற்கு சுற்றுலா சென்ற தனியார் பஸ் குறித்த இடத்தை தவறியமையினால் கல்குவாரிக்கு அருகில் திருப்ப முற்பட்டபோது வேகமாக வந்த அரச பஸ் மோதியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை திருகோணமலை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version