Tamil News

உடைந்த கையுடன், விமான நிலையத்தில் ஐஸ்வர்யா ராய்…. நடந்தது என்ன? அதிர்ச்சியில் ரசிகர்கள்

பாலிவுட்டின் முன்னணி நடிகையான முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் மும்பை விமான நிலையத்தில் இருந்து கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

நடிகை ஐஸ்வர்யா ராயின் கையில் அடிபட்டு கட்டுப் போட்டிருக்கும் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு என சோஷியல் மீடியாவில் பதறிப்போய் உள்ளனர்.

கடந்த மே 14-ஆம் தேதி 77-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் தொடங்கப்பட்ட நிலையில், பல்வேறு இந்திய பிரபலங்கள் இந்த ஆண்டு அந்த விழாவுக்கு படையெடுத்து வருகின்றனர்.

நடிகை ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கேன்ஸ் திரைப்பட விழாவின் ரெட் கார்பெட் அலங்கரிக்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க தனது மகள் ஆராத்யாவுடன் புறப்பட்டு சென்றுள்ளார்.

நேற்று இரவு மும்பை விமான நிலையத்துக்கு வந்த ஐஸ்வர்யா ராய் காரில் இருந்து தனது மகளுடன் இறங்கிய நிலையில் சட்டென விமான நிலையத்திற்குள் நுழைந்தார்.

அப்போது அவரது கையில் கட்டுப்போட்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Exit mobile version